Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, July 12, 2011

போக்குவரத்துக்காக விஜய்யின் கல்யாண மண்டபம் இடிபடுமா?

கடந்த தி.மு.க., ஆட்சியில் மேம்பால பணிகளுக்காக விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் மண்‌டபம் இடிக்கப்பட்டது போல, இப்போது போரூர் மேம்பால பணிகளுக்காக விஜய்யின் திருமண மண்டபத்தையும் இடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

சென்னை, போரூர் சிக்னல் அருகே அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தீர்க்கும் பொருட்டு அப்பகுதியில் ரூ.34கோடி செலவில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளை அகற்ற உத்தரவிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகளும் ஆரம்பித்துவிட்டன. இன்று காலை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலைமையில் 100க்கு அதிகமான ஊழியர்கள் வந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை இடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே, இதே பகுதியில் நடிகர் விஜய்க்கு சொந்தமான சங்கீதா திருமண மண்டபம் இப்பகுதியில் உள்ளது. மேம்பால பணிகளுக்காக விஜய்யின் திருமண மண்படத்‌தின் முன்பக்கம் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கடைகள் இடிக்கப்படுவதால் வியாபாரிகள் திரண்டு வந்தனர். பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் இடிக்கப்பட்டதால் அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க.,வுடன் நேரடியாக ‌மோதத்தொடங்கினார் விஜயகாந்த். அதுபோல் இப்போது விஜய்யின் திருமண மண்டபமும் இடிக்கப்பட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!