Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, July 23, 2011

ஆண்மை பெற ஆத்திசூடி படித்தானாம் ? ஒப்பாரி வைக்கும் பிரதமர் !?

கொழும்பு : அளவான குடும்பங்கள் பெருகி விட்டதால், சிங்கள இனம் அழியும் அபாயம் உள்ளது' என, இலங்கை பிரதமர் ஜெயரத்னே தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடந்த புத்த மதக் கூட்டத்தில் கலந்து கொண்டு, இலங்கை பிரதமர் ஜெயரத்னே பேசியதாவது: கடந்த 60ம் ஆண்டுகளிலிருந்து சிங்கள மக்கள் தொகை குறைந்து வருவதாக சர்வதேச குடும்ப கட்டுப்பாடு அறிக்கை தெரிவித்துள்ளது. 60ம் ஆண்டுகளில் ஒவ்வொரு சிங்கள பெண்ணும், மூன்று குழந்தைகளுக்கு குறைவாகவே பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது. சிங்கள குடும்பங்களில், தற்போது யாரும் தங்கள் குழந்தைகளை புத்த துறவியாக்க முன்வருவதில்லை. வயதான காலத்தில் தங்களை கவனிக்க குழந்தைகள் இல்லாமல் போகும் என்ற நிலையால், அவர்கள் புத்த துறவிகளை உருவாக்குவதில்லை. பொருளாதார நிலை காரணமாக சிங்கள குடும்பத்தினர் அளவான குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர்.

ஆனால், தமிழ் குடும்பத்தினர், ஏழு முதல் எட்டு குழந்தைகளை தற்காலத்திலும் பெற்றுக் கொள்கின்றனர். சிங்கள குடும்பத்தினர் குறைவான குழந்தைகளை பெற்றால், எதிர்காலத்தில் சிங்கள இனம் அழியும் அபாயம் உள்ளது. இவ்வாறு ஜெயரத்னே பேசினார்.

* கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன்,. மற்ற இனம் பற்றி பேச என்ன தகுதி உண்டு உமக்கு.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!