Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, July 9, 2011

படிப்பை வீணாக்கும் ஜெயாவுக்கு எதிரி கலைஞரா., கல்வியா?

கல்வியின் முக்கியத்துவத்தை தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் உணர்ந்துள்ளனர். இதில் ஒவ்வொரு கட்சியனருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்., ஆனால் அனைவரும் அடிப்படையில் தரமான கல்வி வேண்டும் என்பதைத்தான் கருதுகிறார்கள். உயர்கல்வி வரை அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் போதிய கல்வி அறிவு இல்லாததாலேயே வறுமை நிலவுகிறது. வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அங்கெல்லாம் பள்ளிகள் மிகக்குறைவு., ஆனால் தமிழகத்தில் ஆரம்பக் கல்வி எல்லோருக்கும் கிடைக்கிறது. ஆனால் அந்த கல்வியின் தரம் உயர்ந்துள்ளதா? என்பதைப் பார்க்க வேண்டும்.

எனது காலத்தில் 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலை இருந்தது. இப்போது அது 50 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலை உள்ளது., அடுத்த தலைமுறையில் ஓர் ஆசிரியருக்கு 60 மாணவர்கள் என்ற நிலை வந்துவிடக்கூடாது. இதனால்தான் ஓர் ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்ற விதி இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் 25 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் உள்ளார்.

ஒவ்வொரு குழந்தையும் 10-ஆம் வகுப்பு வரை கட்டாயம் படிக்க வேண்டும். அதற்காகத்தான் இலவச கட்டாயக் கல்வியும் வந்துள்ளது., ஆசிரியர்களை அலுவலக பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. ஆனால் 10 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி சர்ச்சை பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மாணவர்களுக்கு திங்கள்கிழமை பாடப்புத்தகம் வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். அப்படி கொடுத்தால் வரவேற்கத்தக்கது. சமச்சீர் கல்வி சர்ச்சைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். கடந்த மார்ச் 31 வரை ரூ. 43 ஆயிரம் கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இது வரும் ஆண்டுகளில் ரூ. 60 கோடி முதல் ரூ. ஒரு லட்சம் கோடி வரை உயரும்.

கல்விக்கடனை திரும்ப செலுத்துவதற்கான காலத்தை 7 ஆண்டுகளில் இருந்து 15 ஆண்டுகளாக அறிவிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார் ப. சிதம்பரம்.

இந்த மாநாட்டில் எம்.பி.க்கள் விஸ்வநாதன், கே.எஸ். அழகிரி, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் காசி, பொதுச் செயலாளர் அப்துல்மஜீத் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

# தமிழக அரசின் ஆனவம் அடக்கப்படுமா? #

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!