Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, July 15, 2011

சொர்கத்து கனி மாதுளை

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளைன்னு மொத்தம் மூன்று வகையான மாதுளை இருக்குது. குடல் அழற்சியைப் போக்குற சக்தி புளிப்பு மாதுளைக்கு உண்டு. இது, உணவு செரிக்கிறதையும் துரிதப்படுத்தும். மேலும், குடல்ல ஏற்படுற இயல்பான மாற்றங்களையும் சரி செய்யும் ஆற்றல் அதுக்கு உண்டு.

இனிப்பு மாதுளை, உடல் சூட்டைத் தணித்து, ரத்த விருத்தியைப் பெருக்கும். அதுமட்டுமல்லாம, உடல் பலவீனத்தைப் போக்கி, தெம்பு கொடுக்கும். மாதுளையோட பூ, பழம், விதை, பட்டைன்னு எல்லாமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுது.

வைட்டமின் `சி' மற்றும் `பி' இதுல அதிகமா இருக்குது. மேலும், இதயநோய் மற்றும் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் வேதிப்பொருட்களும் நிறைய இருக்குது. வாந்தி, மயக்கம், நாக்குல நீர் சுரக்குறது போன்ற பிரச்சினைகளுக்கு மாதுளை ஜுஸ் சிறந்த மருந்து.

ஆனால், எப்போதும் போல இதை ஜுஸ் போடக்கூடாது. மாதுளை முத்துக்களை ஒரு மெலிசான துணியில போட்டுப் பிசையணும். பிறகு துணியைப் பிழிஞ்சா, சாறு வரும். அதுல கற்கண்டைப் பொடிசெய்து போட்டு கலக்கி குடிச்சா, வாந்தியும் நிற்கும்.,நாக்குல நீர் சுரக்குற தொந்தரவும் இருக்காது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!