Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, July 14, 2011

கொலை களத்திற்கு செல்ல கொலை நடுங்கும் ஆசி வீரர்கள்!!

மெல்போர்ன் : இலங்கை போர் தொடர்பான "கொலைக்களம்' வீடியோ காரணமாக, ஆஸ்திரேலிய வீரர்கள் இலங்கை தொடரை புறக்கணிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம், இலங்கை செல்லும் ஆஸ்திரேலிய அணி 2 "டுவென்டி-20', ஐந்து ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது., இதனிடையே இலங்கை போரில் நடந்த படுகொலை தொடர்பாக, இங்கிலாந்தின் "சானல் 4' "டிவி' வெளியிட்ட "சிடி' உலகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் இங்கிலாந்தில், இலங்கை அணி பங்கேற்ற போட்டிகளின் போது, தமிழ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இது ஆஸ்திரேலியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து அங்குள்ள மக்களிடம் "தி ஏஜ்' நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 81 சதவீதம் பேர், ஆஸ்திரேலிய அணி, இலங்கை செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். அதாவது 3,527 பேரில் 2,856 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சீனியர் வீரர்கள் உட்பட சிலர், இலங்கை செல்ல விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

# ஈழ மக்களை மக்களாக பார்க்காவிட்டாலும் மனிதனாக பார்க்கா வேண்டாமா, இது தான் உலகேங்கும் எதிரொலிக்குது. #

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!