Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, July 22, 2011

சதமடிப்பாரா சச்சின்! கொடி கட்டி பறக்கும் சூதாட்டம்!?

புதுடில்லி : சச்சின் 100வது சதம் தொடர்பாக கிரிக்கெட் சூதாட்டம் கொடி கட்டிப் பறக்கிறது. இதுவரை 200 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய உலக கோப்பை தொடரில் போலீசாரின் கடும் நடவடிக்கை காரணமாக பெரிய அளவில் சூதாட்டம் நடக்கவில்லை. அடுத்து நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சச்சின், சேவக் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பெறாததால் சூதாட்டம் நடக்க வாய்ப்பே இல்லாமல் போனது. இதனால் நொந்து போன கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு, தற்போதைய இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் "ஜாக்பாட்' காத்திருக்கிறது. இத்தொடரில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச அளவில் தனது 100வது சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் அடிப்படையில் பெருமளவில் சூதாட்டம் நடக்கிறதாம்.

முக்கிய நகரங்களில் போலீசாரின் கண்காணிப்பு அதிகமாக இருப்பதால், இம்முறை சூதாட்டக்காரர்கள் காசியாபாத், ஹரித்வார் போன்ற சிறிய நகரங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சச்சின் 100வது சதம் அடிப்பார் என்று நம்பி பணம் செலுத்தியவர்களுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உதாரணமாக சச்சின் 100வது சதம் அடிப்பார் என்று கூறி 40 ரூபாய் செலுத்த வேண்டும். அவர் சதம் அடித்தால், 90 ரூபாய் கிடைக்கும். லட்சம் மற்றும் கோடிகளில் கட்டும் போது, அதற்கேற்ப பணம் கிடைக்கும். சச்சின் ஒருவேளை அரைசதம் அடித்தால், பாதி தொகை தான் வழங்கப்படும். அவர் சதம் அடிக்க தவறினால், பணம் கட்டியவர்களின் கதி "அம்போ' தான். சச்சினுக்கு அடுத்து, காம்பிர் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறதாம். இவர் குறைந்தபட்சம் அரைசதம் அடிப்பார் என ஏராளமானோர் பணம் கட்டியுள்ளனர்.

இது குறித்து சூதாட்டப் புள்ளி ஒருவர் கூறுகையில்,""லார்ட்சில் வரலாற்று சிறப்புமிக்க 2000வது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இங்கு சச்சின் 100வது சதம் அடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் "பெட்டிங்' படுஜோராக நடக்கிறது. அனைவரும் சச்சின் சதத்தில் சதம் காண்பார் என்று தான் பணம் செலுத்துகின்றனர். இதுவரை 200 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கட்டப்பட்டுள்ளது. இந்திய அணி இரண்டாவதாக பேட் செய்வதால், தொகை இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம்,''என்றார்.

1 comments :

யாருக்கு எவ்வளவு கிடைக்குதோ அவர் சதம் அடித்தால்
இந்தியாவுக்கே இன்னொரு பெருமை கிடைக்கும்

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!