Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, July 8, 2011

குடும்பத்துக்கு தாரைவார்த்ததால் மீண்டும் கிட்டுமா ? முக்கிய முடிவு

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் பதவிகளை வழங்குவது குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று சந்தித்துப் பேசுகிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ராஜா, கனிமொழி ஆகியோரைத் தொடர்ந்து தயாநிதி மாறனும் சிக்கியுள்ளார். இதனால், அவர், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டிற்காக இரண்டு அமைச்சர்கள் அதுவும் தி.மு.க., என்ற ஒரே கட்சியில் குறுகிய கால இடைவெளிக்குள் ராஜினாமா செய்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதில், தி.மு.க.,வுக்கு அமைச்சர் பதவி அளிப்பது குறித்து காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது. முக்கிய கூட்டணிக் கட்சியாக இருக்கும் தி.மு.க.,வின் இரண்டு கேபினட் அமைச்சர்களும் பதவியை விட்டு போய்விட்டதால், அந்த காலியிடங்களை எப்படி நிரப்புவது என்ற கேள்வி எழுந்துள்ளது.தி.மு.க., சார்பில் என்ன முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பது இதுவரை தெளிவாகவில்லை. புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இப்போதைய இக்கட்டான சூழ்நிலையில் அமைச்சர் பதவி தேவை தானா என்று ஒருதரப்பு கருதுகிறது.

ஆனால், இதுவரை கிடைத்த வாய்ப்புகள் எல்லாவற்றையுமே குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே தலைமை தாரை வார்த்தது. இப்போது, குடும்ப ஆதிக்கம் சற்று தளர்ந்துள்ள நிலையில், அமைச்சர் பதவி வாய்ப்பு வருகிறது என்றால் அதை கட்சிக்காரர்களுக்கு அளிப்பதில் என்ன தவறு என்று இன்னொரு தரப்பு கருதுகிறது.இந்த சூழ்நிலையில் இது பற்றி முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சென்னை வருகிறார். இவர் இன்று காலை, கோபாலபுரத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசவுள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!