Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, July 7, 2011

தனியாக வந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற சாமியார் !

திருநெல்வேலி : நெல்லை லாட்ஜில் தனியாக வந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற போதை சாமியார் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி வண்ணார்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணன், கேரள மாநிலம் கோவளம் லாட்ஜ் ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார். இவரது லாட்ஜ்க்கு அடிக்கடி வந்துசென்ற சோட்டானிக்கரையை சேர்ந்த சாமியார் நந்தகுமார்(40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சாமியார் சோதிடம் பார்த்து சொன்னவை நடப்பதாக கிருஷ்ணன் நம்பினார்.

நேற்று சாமியார் நந்தகுமார் நெல்லையில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார். கிருஷ்ணன் நெல்லையில் உள்ள தமது மனைவி லலிதாவுக்கு போன் செய்து, சாமியார் நெல்லை வந்துள்ள தகவலை தெரிவித்தார். லலிதா, களக்காட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி பானுமதி(38) க்கு ஜோதிடம் பார்க்க அழைத்துச்சென்றார்.

லாட்ஜ் அறையில் சாமியார் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர் அறைக்குள் வந்த பெண்களிடம் வாய்க்கு வந்தபடி உளறியுள்ளார். பின், இருவரின் தலைமுடியை பிடித்து இழுத்து ஒருவர் தலையை இன்னொருவர் தலையோடு மோதியுள்ளார். சேலையை பிடித்து இழுத்துள்ளார். தலைகளை மோதச் செய்ததால் ஏற்பட்ட காயத்தால் இருவரும் அழுதபடியே வெளியேவந்தனர். தலைவிரி கோலமாக வந்த அவர்கள் ஜங்ஷன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து போதை சாமியார் நந்தகுமாரை கைது செய்தனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!