Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, May 6, 2013

சாதிவெறியை சாய்ப்போம்! மதவெறியை மாய்ப்போம்!?

அனைத்து சிறுபான்மையினருக்கும் அன்பான வேண்டுகோள்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து, தலித் மக்களை எதிரிகளாகக் காட்டி, வன்னியர் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்காக பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவரும் பா.ம.க.வைப் போலவே பா.ஜ.க.வும் செயல்பட்டு வருகிறது.

நாகர்கோவில், கோவை, குன்னூர் என பா.ஜ.க.வுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் கடந்த சில மாதங்களாக வேண்டுமென்றே பதற்றத்தை ஏற்படுத்தி, முஸ்லிம்களை எதிரிகளாகக் காட்டி இந்து ஓட்டுக்களை ஒருங்கிணைக்க பா.ஜ.க முயன்று வருகிறது.

மதவெறியின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமான கோவை மாநகரம், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எதைப்பற்றியும் கவலைப் படாமல் தமது சொந்த அரசியல் அறுவடைக்காக பா.ஜ.க மீண்டும் அங்கு கலவர நெருப்பை பற்றவைக்கிறது.

(ஒரு வாரத்தில் தமிழ்நாடு முழுவதும்: 513 பஸ்கள் சேதம் அடைந்துள்ளன., 13 அரசு மற்றும் தனியார் பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன., இதனால் ரூ.2 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டிருக்கும் என தெரிய வந்துள்ளது., 20 புளியமரங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன., 160 மரங்கள் வெட்டப்பட்டு ரோடுகளின் குறுக்கே போட்டு வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டது.)

சுய ஆதாயத்துக்காக சமூக அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்ட பா.ம.க.வை தனிமைப்படுத்தும் நோக்கில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும், ஜனநாயக சக்திகளையும் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் முறையிட்டது போல், இஸ்லாமிய கூட்டமைப்பினரும் செயல்பட்டு பா.ஜ.க.வை தனிமைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

பா.ம.க.வின் சாதிவெறி எந்த அளவுக்கு ஆபத்தானதோ, அதை விடவும் ஆபத்தானது பா.ஜ.க.வின் மதவெறி.

சாதிவெறியை சாய்ப்போம்; மதவெறியை மாய்ப்போம்! (நன்றி: ஆளூர் ஷாநவாஸ்.)

2 comments :

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 3. வேதமும் கீழ்ஜாதி மக்களும்!
ஆரிய வந்தேறிகளால் அலங்கோல ஆச்சார அதிர்ச்சிக‌ள்.

*இந்தியாவின் உயர்ஜாதி பிராமணவாதமும்

*மக்கள் தொடர்பு கருவிகள் யார் பிடியில்?

*இந்தியாவில் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருப்பவை.

•சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொண்டாலும் அவன் எப்போதும் ஓர் அடிமை.
இந்துக்களே! விழிமின்! எழுமின்! ஆசிரியர் DR. . சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA)

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!