Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, October 1, 2011

யாசகம் கேட்ட பெண்ணுக்கு அடித்தது100 டாலர் !!

மும்பை சிக்னலில் தன்னிடம் பிச்சை கேட்ட பெண்ணுக்கு 100 டாலர் (இந்திய ரூபாயில் 5000) கொடுத்தார். ஹாலிவுட் நடிகையாக இருப்பவர் பாரிஸ் ஹில்டன். கோடீஸ்வரியான இவர், தனியாக அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பல தொழில்களில் செய்து வருகிறார். இந்தியாவில் தனது பொருட்களை பிரபலப்படுத்து நோக்கோடு மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில் மும்பையின் அந்தேரி பகுதியில் சிக்னலுக்காக பாரிஸ் ஹில்டன் கார் நின்று கொண்டிருந்தது. அப்போது கைக்குழந்தையுடன் ஒரு பெண், ஹில்டனின் கார் கண்ணாடி‌யை தட்டி பிச்சை கேட்டுள்ளார். உடனே ஹில்டன் 100 டாலரை கொடுத்துள்ளார். 100 டாலர் என்பது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.5000 ஆகும்.

இந்தியாவில் உள்ள வறுமை நிலையை பற்றி தனது டுவிட்டரில், இந்தியா மிகவும் அழகான நாடு. ஆனால் சில பகுதிகள் வறுமைக் கொடுமை உள்ளது. தெருவில் படுத்துத் தூங்கும் குழந்தைகளைப் பார்த்து என் இதயம் உடைந்துவிட்டது என்று மிகவும் வேதனைபட்டுள்ளார். மேலும் பாலிவுட்டில் இருந்து நடிக்க இரண்டு ஆஃபர்கள் வந்துள்ளதாகவும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்தியிலும் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!