Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, June 22, 2011

கலைஞர் மேல் அக்கறைபடும் ஜெயா?

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாபஸ் பெற்றுக்கொண்டார். நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22.11.06 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

இந்த அறிக்கை தன்னை அவதூறு செய்வதாக கூறி, ஜெயலலிதா மீது, கருணாநிதி வழக்கு தொடர்வதற்கு அனுமதி அளித்து 28.12.06 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் கருணாநிதி சார்பில் அப்போதைய சென்னை நகர குற்றவியல் அரசு வக்கீல் 12.1.07 அன்று ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஜெயலலிதா 17.1.07 அன்று மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் பொதுத்துறை செயலாளர், சென்னை நகர குற்றவியல் அரசு வக்கீல், கருணாநிதி ஆகியோரை பிரதிவாதியாக ஜெயலலிதா சேர்த்திருந்தார். அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.ஜோதிமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள மனுதாரர் விரும்புவதாக கூறினார். அதைத்தொடர்ந்து நீதிபதி பி.ஜோதிமணி, `ஜெயலலிதா தொடர்ந்துள்ள வழக்கை திரும்ப பெறுவதாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதிட்டார்.

அதற்கான மனுவையும் அவர் தாக்கல் செய்தார். வழக்கு வாபஸ் பெறப்படுவதை அடுத்து, அந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று உத்தரவு பிறப்பித்தார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!