Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, June 2, 2011

எயிட்ஸ்ம் இந்தியாவின் விழிப்புணர்வும்!?

ஐ.நா: வளரும் தலைமுறையினரில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் தினமும் எய்ட்ஸ் நோய்க்கு தாக்குதலுக்கு உள்ளாவதாக ஐ.நா சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினரில் பெண்கள் சுமார் 46 ஆயிரமும், ஆண்களில் சுமார் 49 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் தலைமுறையினர் எய்ட்ஸ் பாதிப்பில் தென் ஆப்ரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டில் சுமார் 2லட்சத்து 10 ஆயிரம் பெண்களும் 82 ஆயிரம் ஆண்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். தொடர்ந்து நைஜீரியாவில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பெண்களும் , ஒரு லட்சம் ஆண் களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கென்யா நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகம் முழுவதும் 60 சதவீதம் வரை வளரும் இளம் பெண்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தாலும் தென்னாப்ரிகாவில் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப் படுகிறது. இந்தவகை நோய் பரவுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் குறிப்பாக குடும்ப சூழ்நிலை, சமுதாய பழக்க வழக்கம், அரசியல் சூழ்நிலை போன்றவை முக்கிய காரணியாக கூறப்படுகிறது.

கடந்த 2009-ம் ஆண்டில் 15-24 வயதினரில் சுமார் 41சதவீதத்தினர் எய்ட்ஸ் நோயால் பாதிக் கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 15 வயது கொண்டவர்களே அதிகமாகும். இவ்விசயத் தில் இந்தியா 10-வது இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும் மற்றும் சமுதாய பழக்க வழக்கம், அரசியல் எதிர்ப்பு போன்ற சூழ்நிலைகளை தாண்டி பாலியல் கல்வி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!