Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, June 19, 2011

காவல்துறையை கிலி பிடிக்கச்செய்யும் தமிழக அரசு!!

திருவனந்தபுரம்:கேரள மாநில காவல் துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முதல், அனைத்து உயரதிகாரிகளும் தங்களது சொத்துக் கணக்கு விவரங்களை, தங்களது மேல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, மாநில டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தில் பல்வேறு மோசடி நிதி நிறுவனங்களில், கேரள மாநில காவல் துறையைச் சேர்ந்த சிலர், பங்குதாரர்களாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நிதி முதலீடு சம்பந்தமான எந்த நிறுவனங்களையும் மறைமுகமாக நிர்வகிக்கவோ, பங்குதாரர்களாகவோ கூடாது என, மாநில போலீஸ் டி.ஜி.பி.,ஜேக்கப் புன்னூஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநில காவல் துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முதல், அவருக்கும் மேல் உள்ள அனைத்து உயரதிகாரிகளும் தங்களது சொத்துக் கணக்கு விவரங்களை உடனடியாக தங்களது மேல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த உத்தரவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.போலீசார் இடமாற்றத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என, போலீஸ் சங்கத்தின் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது என்றாலும் அதை அவர் நிராகரித்து விட்டார். போலீஸ் உயரதிகாரிகள் இடமாற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!