Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, June 27, 2011

சுய மரியாதை சித்தாந்தம் பேசும் ஷ்ரேயா!

மதுபழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே போய்கிறது. குறிப்பாக இப்போது பெண்களும் அதிகளவில் குடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மதுபழக்கத்தை ஒழிக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்து பல்வேறு முயற்சிகளை எடுத்து கொண்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு 25வயதுக்கு உட்பட்டவர்கள் குடிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நடிகை ஸ்ரேயா.

இதுகுறித்து தனது டுவிட்டர் இணையதளத்தில் அவர் கூறியிருப்பவதாது, 18வயதில் ஒருவருக்கு ஓட்டுபோடும் உரிமை, திருமணம் செய்யும் உரிமை வந்துவிடுகிறது. அப்படி இருக்கையில் தண்ணியடிக்க மட்டும் 25வயசா...? என்ன ஒரு முட்டாள்தனம் என்று கூறியிருக்கிறார். ஸ்ரேயாவின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் இந்தபிரச்சனை பூதாகரமாக வெடிக்கவும் அதற்கு ஸ்ரேயா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தனிமனிதன் ஒருவன் சுயமாக முடிவெடுக்க, அவனுக்கு முழுஅதிகாரமும் உண்டு. எந்த வயதில் எதை செய்யலாம், செய்யக்கூடாது என்று அவனுக்கு தெரியும். இதைத்தான் நான் கூறினேனே தவிர, மற்றபடி குடிபழக்கத்தை பற்றி நான் எதுவும் வாதம் செய்யவில்லை. இனி இதுபற்றி நான் ‌எதுவும் பேசவிரும்பவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

2 comments :

thani manaitha urimai athu avanaiye paathikkum enraal urimaiyai parippathil thavarillai... pakirvukku nanri. vaalththukkal

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!