Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, June 28, 2011

பெண் போ ( லி ) லீஸ் !!!

மதுரையில் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் போலீஸ் உடையில் இளம்பெண் ஒருவர் பொதுமக்களிடம் இன்று மிரட்டி வசூல் செய்துகொண்டிந்தார். அப்போது அந்த பக்கமாக வந்த அண்ணாநகர் காவல் நிலைய போலீஸுக்கு அந்த இளம்பெண்ணின் நடவடிக்கை சந்தேகத்தை கொடுத்தது.

அவரிடம் எந்த காவல் நிலையத்தில் பணிபுரிகிறீர்கள் என்று கேட்க, முன்னுக்குபின் முரணான பதிலைச்சொல்ல அவரை விசாரணைக்கு அழைத்துச்சென்றன., அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஏ.சி. வெள்ளைத்துறை தலைமையிலான டீம் தனி அறையில் வைத்து அந்த இளம்பெண்ணிடம் விசாரணை செய்தது.

விசாரணையில் தனது பெயர் ராணி என்றும், தனக்கு 18வயது ஆகிறது எனறும் குறிப்பிட்டுள்ளார்., அவர் மேலும், ‘’எனக்கு 10 போலீஸ் அதிகாரிகளூடன் தொடர்பு இருக்கிறது. அவர்கள் எனக்கு பண உதவி செய்து வந்தார்கள். தற்போது அந்த அதிகாரிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

நான் கடந்த ஒரு வருடமாக போலீஸ் உடையில் பொதுமக்களை ஏமாற்றி வருகிறேன். எனக்கு அந்த 10 அதிகாரிகள் ஆதரவாக இருக்கின்றனர்’’ என்று அதிர்ச்சிகரமான வாக்குமூலம் அளித்துள்ளார்., ராணி சொல்வது உண்மைதானா என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!