Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, June 2, 2011

சுதந்திர தேசமாக வாக்கெடுப்பு நடத்தவேண்டும், வை கோ

பெல்ஜியம் நாட்டில், ஐரோப்பிய யூனியன் கவுன்சில் கூட்டத்தில், ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்னை குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: இலங்கை அரசு, ஏழு வல்லரசுகளின் ராணுவ உதவியுடன், தமிழ் மக்களை கொன்று குவித்தது. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும், போரை நிறுத்தும்படி கூறியும், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை.

2009ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, மே மாதம் வரை லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஜெர்மனி தீர்மானம் கொண்டு வந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரித்தன. இலங்கைக்கு பொருளாதார உதவி செய்யக்கோரி, இலங்கை அரசு தயார் செய்த தீர்மானத்தை, இந்தியா, பாகிஸ்தான், சீனா உட்பட 29 நாடுகள் ஆதரித்தன. அதை ரத்து செய்யும்படி, தற்போது ஐ.நா., மூவர் குழு பரிந்துரைத்துள்ளது.

ராஜபக்ஷேவையும், அவரது சகோதரர்களையும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். கிழக்கு தைமூர், தெற்கு சூடான் ஆகியவை தனி நாடாக ஓட்டெடுப்பு நடத்திய ஐ.நா., மன்றம், தமிழ் ஈழம் சுதந்திர தேசமாக, அனைத்து நாடுகளின் பார்வையாளர்களுடைய கண்காணிப்பில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும், அந்தந்த நாடுகளில் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய பார்லிமென்டை கேட்டுக் கொள்வதெல்லாம், இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவம், காவல் துறை உடனே அகற்றப்பட வேண்டும். சிங்களர் குடியேற்றங்கள் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வீடுகளை இழந்து முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு, மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள, செஞ்சிலுவை சங்கம், தொண்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். சிங்கள ராணுவத்தாலும், போலீசாராலும் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் உடனே விடுவிக்கப்பட வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!