லண்டன் ஜூன் 9: இங்கிலாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 12 வியாபாரிகள் உள்பட 40 பேர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இங்கிலாந்தில் உரிய விசா அனுமதியின்றி இந்தியர்கள் தங்கியிருப்பதாக குடியேற்றத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படிலீசெஸ்டர்ஷெயர் மாகாணத்தில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்திற்குள் 80-க்கும் மேற்பட்ட குடியேற்றத்துறை அதிகாரிகள் , போலீசார் உதவியுடன் அதிரடியாக புகுந்தனர். அங்கு 80 ஊழியர்களை கைது செய்தனர். இவர்களின் 28 பேர் இந்தியர்கள். இது குறித்து இங்கிலாந்து குடியேற்றத்துறை அமைச்சர் டாமின்கிரின் கூறுகையில், லீசெஸ்டர்ஷெயர் மாகாணத்தில் தான் இந்தியா வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் உரிய ஆவணம் இன்றி பலர் தங்கியிருப்பதாக தெரிகிறது.
இதே போன்று கடந்த மே மாதம் 26-ம் தேதியன்று இம்மாகாணத்தில் உள்ள ஒரு துணி உற்பத்தி நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்தியதில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 12 பேர் இந்தியர்கள். இவர்கள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர் என்றார். போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்தியர்கள் மீதான நடவடிக்கை தொடரும். இவர்கள் குற்றவழக்கு நிரூபிக்கப்பட்டால் 10 ஆயிரம் பவுண்ட்கள் அபராதம் விதிக்கப்படும் என்றார். இதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் இங்கிலாந்தில் குடியேற்றத்துறையினர் மிகபெரிய ரெய்டு நடத்தியதில் 40 இந்தியர்களை கைது செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment