Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, June 11, 2011

குழந்தை தொழிலார்களை ஒழிப்போம், நம் அனைவருடைய கடமை

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.

குழந்தை தொழிலாளர் முறை நமது நாட்டில் அறிவும், வலிமையும், பொருந்திய தலைமுறையாக உருவாக வேண்டிய ஆயிரக்கணக்கான குழந்தைகள், கடும் உடல் உழைப்பின் சுமையால் நசுக்கப்படுகின்றனர். இக்குழந்தைகளை உடல் உழைப்பின் நிர்பந்தத்திலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இயல்பான வளர்ச்சியை செய்வது நமது தலையாய கடமை.

குழந்தை பருவம் என்பது குழந்தைகளுக்கு இயற்கையாகவே அமைந்திட்ட உரிமை. அந்த உரிமையை அவர்களிடமிருந்து பறிப்பது இயற்கை நியதிக்கும், சமூகநீதிக்கும் புறம்பானது என்பதை கருத்திற்கொண்டு, உலகெங்கும் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் நாம் அனைவரும் நம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப உறுதி ஏற்போம்.

குழந்தைகள், பணிக்கு செல்வதைக் கண்டால் அவர்களை தடுத்து பள்ளிக்கு அனுப்பி வைப்போம். குழந்தைத் தொழிலாளர் முறை என்னும் சமூக அவலம் நீக்கப்பட, சமுதாயத்தில் உள்ள அனைவரும் உறுதியேற்போம். நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட, சிந்திப்பீர் பெற்றோர்களே.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!