Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, June 23, 2011

கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா?

மதுரை மேலூரை சேர்ந்தவர் சின்னகுரும்பன். இவரது மகள் 2009ல் தனது காதலனுடன தலைமறைவு ஆனார்.

இதையடுத்து மகளைக்காணவில்லை என்று சின்னகுரும்பன், மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் மதுரை நீதிமன்றத்தில் காதலனுடன் ஆஜராகி காதலனுடந்தான் செல்ல விருப்பம் என்று தெரிவித்தார் சின்னகுரும்பன் மகள்.

ஆனால் மேஜர் ஆகாததால், அரசு இல்லத்திற்கு அனுப்பியது நீதிமன்றம்., இந்நிலையில் கடந்த வாரம் தந்தைக்கு கடிதம் எழுதி, என்னை அழைத்துச்செல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

இதையடுத்து தனது மகளின் கடிதத்தை காட்டி தன்னுடன் அழைத்துசெல்ல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் சின்னகுரும்பன்., இதனால் இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள் சின்னகுரும்பனுன் அவரது மகளும். மகளின் காதலனுன் அங்கே ஆஜராகவும் அதிர்ச்சியானார் சின்னகுரும்பன்.

அடுத்த அதிர்ச்சியாக, நீதிமன்றத்தில், நான் இப்போது மேஜர். அதனால் எனக்கு காதலனுடன் போகத்தான் விருப்பம்ம். இதைச்சொன்னால் என் அப்பா கோர்ட்டுக்கு வரமாட்டார். அதனால்தான் அவரிடம் பொய்சொன்னேன் என்று சொன்னார்.

கோர்ட்டும் மகளை காதலனுடன் செல்ல உத்தரவிட்டதால் கலங்கிய கண்களூடன் வீடு திரும்பினார் சின்னகுரும்பன்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!