Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, June 18, 2011

உலகெங்கும் அகோரமாய் காட்சி அளிக்கும் பயங்கரவாதம்!?

பாஞ்ச்குலா: சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆர் எஸ் எஸ் தீவிரவாதி லோகேஷ்குமார் சர்மாவுக்கு காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள திவானா கிராமத்தில் கடந்த 2007-ம் ஆண்டு சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தில் 68 பேர் இறந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். ÷இது தொடர்பாக ஹிந்து தீவிரவாதி சுவாமி அசீமானந்தா கைது செய்யப்பட்டு அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆர் எஸ் எஸ் தீவிரவாதி லோகேஷ்குமார் சர்மா கடந்த மே மாதம் 15-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீஸôர் தீவிர விசாரணை நடத்தினர். சனிக்கிழமை இவர் பாஞ்குலா கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு ஜூலை 1-ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டார்.
------------------------
# கோத்ராவிற்க்கப்புறம் குஜராத்தில் நடந்தது தற்செயல் அல்ல. ஏதோ கட்டுப்படுத்த முடியாத, திட்டமிடப்படாத சமூக வன்முறையுமில்லை. வேண்டுமென்றே ஒரு இன மக்களை அழிக்கப் போடப்பட்ட செயல் திட்டம். ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட படுகொலைகள்.

திட்டமிட்டபடி, தொலை நோக்குப்பார்வையுடன் நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற எந்த வித்தியாசமுமின்றி முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் குறிவைக்கப்பட்டது. பெருமளவில் காவிக்கும்பல் ஒரே நோக்கத்தின்கீழ் ஒன்று சேர்ந்தது. எந்த வகையிலேனும் முஸ்லிம்களை கொல்லவேண்டும். குத்தி, கிழித்து முடமாக்கப்பட்டபின் உயிரோடோ, இல்லாமலோ எரியூட்டினார்கள்.

இதில் பங்கெடுத்துக்கொண்ட காவிக் கும்பல்களில் சிலர் தெஹல்காவிடம், இஸ்லாம் எரியூட்டுவதை அனுமதிக்கவில்லை என்பதால் முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொல்வதிலேயே ஆனந்தமடைந்ததாக சொன்னார்கள்.

பெப்ருவரி 27 க்குப்பிறகு, மூன்று நாட்கள் குஜராத்தின் பிஜெபி அரசை இந்துத்வ காவிக்கும்பல் கையிலெடுத்துக்கொண்டு, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டதிற்க்கு இட்டுச்சென்றது. ஆர்எஸ்எஸ், விஹெச்பி, பஜ்ரங்தள், கிசான் சங்க், அகிலபாரதீய வித்யார்தி பரிஷத், பிஜெபி, கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட கொலைப்படை உருவாக்கப்பட்டது. மாநிலமெங்கும் பள்ளிவாசல்கள், தர்காக்கள் அழிக்கப்பட்டன. 73 முஸ்லிம் வழிபாட்டுத்தலங்கள் அஹமதாபாதில் மட்டும் தீக்கிரையாக்கப்பட்டது. சபர்கந்தாவில் 55 ம் வடோடராவில் 22ம் பின்னர் கொளுத்தப்பட்டது.

மஹாத்மாவின் பூமிக்கு நீங்கா களங்கத்தை ஏற்படுத்திய இந்த காவிக் கும்பல் அடியாட்கள் இரு வகைப்பட்டனர். திரைமறைவிலிருந்து சதித் திட்டம் தீட்டிய கட்சிநிர்வாகிகள் மற்றும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் நடத்திய காலாட்படை. சிலசமயம் தலைவர்களே காலாட்படையிலும் தைரியமாக பங்கெடுத்தார்கள் இதையெல்லாம் முன்னின்று நடத்தி ஆலோசனை வழங்கியது ஒரு மாநில முதல்வர் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை, ஆகையால் இவரை மோடி என்பதற்கு பதிலாக நரமாமிச கேடி என்பதே பொருத்தமான இருக்கும் #

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!