Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, June 24, 2011

ஸ்பெக்ட்ராம் புகழ் ராஜா மனைவி வருமான வரித்துறை அழைப்பு?

திருச்சி,ஜூன் 25 முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவி மற்றும் உறவினர்களிடம் நேற்று திருச்சி வருமானவரி அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி நிர்வாக இயக்குநர் சரத்குமார் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ராசா கைது செய்யப்பட்டபோது சி.பி.ஐ பெரம்பலூர் மற்றும் திருச்சியில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர்களிடம் ஊழல் தொடர்பான விசாரணை நடைபெற்றது.

அப்போது ராசாவிற்கு சொந்தமான சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். கைப்பற்ற பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை துணை இயக்குநர் ஆல்பர்ட் மனோகரன் தலைமையில் திருச்சி, பெரம்பலூரில் விசாரணை நடைபெற்றுவந்தது. இது தொடர்பாக ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராசாவின் சகோதரர் ராமச்சந்திரன், சகோதரி மகன் பரமேஸ்குமார், சகோதரி மகள் மற்றும் ஆடிட்டர்களான பிரான்சிஸ், முத்துக்குமாரசாமி, சுரேஷ்குமார் ஆகியோரும் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். அதன்படி நேற்று காலை அந்த 7 பேரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.

ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராமச்சந்திரன், பரமேஸ்குமார் ஆகிய 3 பேரிடம் வருமான வரித்துறை அலுவலகத்தில் தனி அறையில் விசாரணை நடத்தினர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!