Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, June 22, 2011

பெற்ற பெண் குழந்தையை புறக்கணிக்கும் பெற்றோர்கள்!?

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கருணை இல்லம் நடத்தி வரும், மேரி. இவரது வீட்டுக்கு பக்கத்தில் கடந்த 18.06.2011 அன்று இரவு, முப்பது வயது மதிக்கத்தக்க, மனநலம் பதிக்கப்பட்ட ஒரு பெண் பிறந்து சில நிமிடங்களே ஆன ஒரு குழந்தையை கையில் வைத்துக்கொடிருந்தார்.

அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் மேரிக்கு தகவல் கொடுத்ததால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்த அந்த குழந்தையை மீட்ட மேரி, மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்து, கடந்த 20.06.2011 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனத்தை சந்தித்து இக்குழந்தையை தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் ஒப்படைத்தார்.

சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில், கடந்த 1991 ம் அண்டு முதல் 989 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்., இவற்றில், 69 ஆண் குழந்தைகளும், 916 பெண்குழந்தைகளும், 3 பாலினம் அறிய முடியாத குழந்தைகளும் உள்ளார்கள் என்று சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்த தொட்டிலில் போடப்பட்ட இக்குழந்தைகள், அரசால் அங்கீகரிக்கப்பட தத்து மையங்கள் மூலம் தகுதி வாய்ந்த பெற்றோர்களுக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளர்கள் என்று தெரிவித்தார்கள்

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!