Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, June 20, 2011

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா? புரோகிதர் மந்திரம் சொல்ல

காத்மாண்டு: நேபாள் நாட்டில் முதன்முறையாக இந்து கோயில் ஒன்றில் இந்து மதசடங்கு முறைப்படி அமெரிக்காவைச் சேர்ந்த ஒரினச்சேர்க்கை (‌லெஸ்பியன்) தோழிகள் இருவர் திருமணம் செய்துகொண்டனர்.

புரோகிதர் மந்திரம் சொல்ல , அங்குள்ள இந்து கோயில் அர்ச்சகர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது. இந்த திருமணம் ஆசியாவின் முதன்முதலாக வெளிப்படையாக நடந்த லெஸ்பியன் திருமணம் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் கலேரோடோவைச் சேர்ந்தவர் கர்டினி மிட்செல் (41) இவர் ஒரு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சாராவெல்டன் (48) இவர் அமெரிக்காவில் வக்கீலாக உள்ளார். இவரும் நீண்ட நாட்களாக நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதில் ஷாராவெல்டன் , நேபாள் வம்சத்து அமெரிக்க வாழ் பெண் ஆவார். எனவே அவரது விருப்படி நோபள் நாட்டிலேயே இந்து முறைப்படி திருமணம் செய்ய கர்டினி மிட்செல் சம்மதித்தார். இருவரும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நேபாள் வந்தனர். திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஷாப்பிங் செய்தனர். நேற்று காத்மண்டுவில் உள்ள தக்ஷின்காளி எனும் புகழ்பெற்ற இந்து கோயிலில் , இந்து சமய சடங்குகளின்படி, புரோகிதர்கள் மந்திரம் சொல்ல இவர்களது திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்தை நேபாள் நாட்டின் ஓரினச்சேர்க்கை திருமண உரிமையை ஆதரிக்கும், புளு டைமன்ட் சமூகம் மற்றும் பிங்க் மவுன்டைன் ,எனும் அமைப்புகள் முன்னின்று நடத்தி வைத்தது. இதில் இருவீட்டு குடும்ப உறுப்பினர்கள், திருநங்கைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இதற்கிடையே நேபாள் கோர்ட்டில் ஏற்கனவே ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதியளித்திருந்தது. அதுமட்டுமின்றி, ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பெண் லெஸ்பியன்களுக்கு சட்ட பாதுகாப்புக்கென புதிய அரசியல் சட்டத்தையும் இயற்றியுள்ளது. இந்த லெஸ்பியன் திருமணம் ஆசியாவின் முதல் லெஸ்பியன் திருமணம் என கூறப்படுகிறது. இந்த திருமணம் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள்,லெஸ்பியன்கள் வருகை அதிகரிக்கும் அரசுக்கு அன்னிய செலாவணி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நேபாள் நாட்டில் நிலவுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!