Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, June 29, 2011

நானோ கார் வழங்கி கவ்ரவித்த பள்ளி நிர்வாகம்

மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகாவுக்கு பள்ளி நிர்வாகம் நானோ கார் வழங்கி கவ்ரவித்தது. 3ம் இடம் பிடித்த மாணவி பி.எஸ்.ரேகாவுக்கு மொபெட் வழங்கப்பட்டது.

மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று கே.ரேகா முதலிடம் பிடித்தார். மேலும் அதே பள்ளி மாணவி பி.எஸ்.ரேகா 1200 க்கு 1186 பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார்.

இந்த மாணவிகளை கெளிரவிக்கும் வகையில் ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி தாளாளர்கள் மணிவண்ணன் மற்றும் செல்வி மணிவண்ணன் ஆகியோர் பள்ளி நிர்வாகம் சார்பில் முதல் மாணவி கே.ரேகாவுக்கு நானோ காரையும், 3 ம் இடம் பிடித்த மாணவி பி.எஸ்.ரேகாவுக்கு மொபெட்டும் வழங்கி கெளிரவித்தனர்.

மேலும் பிளஸ் 2 வகுப்பில் பாடம் நடத்திய 8 ஆசிரியர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் சம்பத்குமாருக்கு சொகுசு கார் வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!