Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, August 9, 2011

மலேசியாவில் பொழுது போக்கிற்காக ஆடியது ரம்மி போனது ஐந்து உயிர்

கோலாலம்பூர் : மலேசிய நாட்டின் கேடா மாநிலத்தில், காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்த 5 பேர் போலீஸôரைப் பார்த்ததும் ஆற்றில் குதித்து தப்ப முயன்று வெள்ளத்தில் மூழ்கினர்.

40 வயது முதல் 50 வயது வரை உள்ள 5 பேர் ஆற்றங்கரையோரம் சந்தித்துக் கொண்டனர். உடனே பொழுது போவதற்காக காசு வைத்து சூதாடத் தொடங்கினர். ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தபோது தங்களைப் போலீஸôர் சூழ்ந்துகொண்டதை உணர்ந்தனர்.

சூதாடினால் நீதிமன்றத்தில் ஆறு மாதம் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிப்பார்கள். எனவே போலீஸôரிடம் சிக்கக்கூடாது என்று தீர்மானித்த 5 பேரும் போலீஸôரே எதிர்பாராத வண்ணம் வெள்ளம் கரை புரண்டோடிய ஆற்றில் குதித்துவிட்டனர்.

நீச்சல் தெரிந்திருந்தும் வெள்ளத்தின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் அப்படியே ஆற்றில் மூழ்கினர். அவர்கள் வெளியில் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ஆற்றின் கரையோரமே ஓடிய போலீஸôர் அவர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதை முதலில் உணர்ந்தனர். பிறகு அவர்களின் குடும்பத்தாருக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!