Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, December 12, 2011

அரைக்கால் டவுசரின் அயோ (த்தி) க்கிய தனம் ?

பெங்களூர்: கேரளா மாநிலத்தை சார்ந்தவர் கெ.கெ.ஷாஹினா. இவர் டெஹல்கா பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சியான கே.கே.யோகானந்தா என்பவரை நேரில் சந்தித்து பேட்டியெடுத்து போலீசாரின் போலி வேடத்தை கலைத்தார் ஷாஹினா. இதனால் கோபமுற்ற கர்நாடகா மாநில பா.ஜ.கவின் பாசிச போலீஸ் ஷாஹினா மீது சாட்சியை மிரட்டியதாக வழக்கு பதிவுச்செய்தது. இதனைத் தொடர்ந்து ஷாஹினா பெங்களூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சோம்வார்பேட் தாசில்தார் அலுவலகத்திற்கு இவ்வழக்கு சம்பந்தமாக சென்றார்.

அப்பொழுது அவரது வேனை சூழ்ந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஷாஹினாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவ்வேளையில் சுற்றிலும் நின்றிருந்த 10க்கும் மேற்பட்ட போலீசார் ஹிந்துத்துவா தீவிரவாதிகளை கலைந்து செல்ல கோராமல் வேடிக்கை பார்த்தனர். இதனால் துணிச்சல் பெற்ற அவர்கள் ஷாஹினாவின் மீது கல்லை வீசி தாக்கினர்.

இத்தாக்குதல் குறித்து ஷாஹினா கூறுகையில்; “நான் முன்னரே மூத்த போலீஸ் அதிகாரியை அழைத்து பாதுகாப்பு அளிக்குமாறு கோரியிருந்தேன். ஆனால் சோம்வார்பேட் போலீஸ் எனக்கு பாதுகாப்பு அளிக்க மறுத்துவிட்டது.” என தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக ஷாஹினாவின் வழக்கறிஞர் பி.டி.வெங்கடேஷ் கூறுகையில்; “இச்சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர உள்ளோம். அதில் வட்டார போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் புகார் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்., தினம் கிழிக்கப்படும் தீவிரவாத ஆர் எஸ் எஸ்" ன் அரைக்கால் டவுசர்.

3 comments :

அரைக்கால் டவுசர்///
ஹி ஹி ஹி.... சூப்பர் பேரு...

தெரிந்தக் கதை தான் இது .அவர்கள் பிடித்தால் சூலம்
மற்றவர்கள் பிடித்தல் ஆயுதம் ,இப்படி தானே நடக்குது தினம் ...
பகிர்வுக்கு நன்றி

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!