Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, August 27, 2011

குறைவான தூக்கம் உடலுக்கு கேடு விளைவிக்கும்! ஆய்வில் !

தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாட்டினை கேட்டிருப்பீர்கள்.ஆனால் தூங்கினால்தான் ஆற்றல் கிடைக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும். நாள் முழுவதும் உழைக்கும் நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்க தூக்கம் அவசியமாகிறது.

சில நாட்கள் தூங்காமல் இருந்தால் ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து நோய் எதிர்ப்பு தன்மையும் குறையும்..

தசைகளோட வலிமையும் குறையும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் வெப்ப நிலை மாறுபடும். இது உடலுக்கு சிக்கலை உண்டாக்கும். உள்ளத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தும். தூங்காமல் இருந்தால் ரத்தத்தில் இருக்கும் மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் என்னும் ரசாயனத்தின் அளவு கூடுகிறது.

ஞாபக சக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். உடலையும் மனசையும் சேர்த்து பாதிக்கும் ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு . எளவே தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுப்பது நல்லது என்கிறது ஆய்வு.

** அதற்காக 24 மணி நேர்முமல்ல, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் முழுமையாக தூங்கினால் போதுமானது. **

2 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!