Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, August 8, 2011

கொலைகாரனுக்கு சங்கு ஊத வாரீர்! தீர்வு காண வாரீர் !! வை கோ

சென்னை : "ஈழத்தமிழர்" பிரச்னைக்காக வரும் 12ம் தேதி, டில்லியில் ம.தி.மு.க., போராட்டம் நடத்தும், என வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கள ராணுவ தாக்குதலில், லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். உலகத் தமிழர்கள் விம்மி அழுதபோது, மத்திய அரசு, இலங்கை முப்படைகளுக்கு ஆயுதம், பணத்தை அள்ளித் தந்து, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இயக்கியது, மன்னிக்க முடியாத துரோகம்.

ஈழத் தமிழர்களை கொடூரமாக அழித்த காட்சிகளைப் பார்த்து, உலகின் பல்வேறு நாடுகளில், சிங்கள அரசுக்கு எதிராக கண்டனக் குரல் ஓங்கி வருகிறது. மத்திய அரசு தனது துரோகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இலங்கை அரசுக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும்.

பிரச்னைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு என்பதால், உலக நாடுகள் கண்காணிப்பில், பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களும் ஓட்டளிக்கும் வாய்ப்பளிக்க ஐ.நா., நடவடிக்கை எடுக்கக் கோரி, வரும் 12ம் தேதி, டில்லி பார்லிமென்ட் அருகே உள்ள, ஜந்தர் மந்தரில், என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. ஈழத்தமிழ் உணர்வாளர்கள் இதில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!