Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, August 26, 2011

இன (ஈழ) கொலைகாரனுக்கு நெருக்கடிகள் தருமா யு எஸ் !?

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் சம்பந்தமாக ஐ.நா.சபை நடத்தவிருக்கும் கூட்டத்தை முன்னிட்டு, அடுத்த வாரம் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்கத்தூதர் ராபர்ட் பிளேக் இலங்கைக்கு வரவிருப்பதாகவும், அப்போது அவர் அரசு உயர் அதிகாரிகளிடம் பேசவிருப்பதாகவும் இலங்கையைச் சேர்ந்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இலங்கைப் போரின் போது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் பற்றியும் பேச அமெரிக்க தூதர் ராபர்ட் இலங்கை வருவது இரண்டாவது முறை என்றும் அந்த இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வரும் செப்டம்பர் மாதம் நடககவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகவுன்சில் மாநாட்டில் பங்கேற்பதை இலங்கை தவிர்த்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

** வெறும் பார்வையாளராக செல்லாமல், இம்முறையாவது இக்கொலைகாரனுக்கு வல்லசுகள் நெருக்கடிகளை கொடுத்து தண்டிக்க வேண்டும்.,நம்புவோம். **

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!