Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, August 15, 2011

தமிழகத்தை அச்சத்துக்குள்ளாகிய காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிப்பு

வாஷிங்டன் : சிக்குன்-குனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்தை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடும் காய்ச்சலோடு மூட்டு வலியை ஏற்படுத்தும் சிக்குன்-குனியா நோய், சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தைப் பாதித்தது.

இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. தற்போது, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சிக்குன்-குனியாவை தடுக்க வழி செய்யும் மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட சிக்குன்-குனியா வைரசைக் கொண்டு இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து, பரிசோதனை ரீதியாக எலிக்கு பயன்படுத்தப்பட்டு, அதில் வெற்றி காணப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

"மனிதர்களுக்கு இந்த மருந்து எந்த விதத்தில் வேலை செய்கிறது என்பது உள்ளிட்ட சோதனைகள் முடிந்த பின், இதற்கு அனுமதி கிடைக்கும். இந்த தடுப்பூசி தயாரிப்பு செலவும் குறைவு தான்' என, டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்கேட் வீவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!