Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, August 22, 2011

சர்வாதிகாரியாக நடந்து கொள்ளும் ஜெயா! ஸ்டாலின் காட்டம் !?

தஞ்சாவூர் திலகர் திடலில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி தலைமையில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின்,

தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. பொய் புகார் அளிப்பவர்கள் மீது உச்சநீதிமனறம் வரை சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியில் வேறுபாடு இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியை ஜெயலலிதா அரசு ஏற்க மறுத்து அவசர சட்டம் கொண்டு வந்து ரத்து செய்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் சிறப்பான தீர்ப்பு வழங்கியதால், தமிழக மக்கள் வெற்றி அடைந்துள்ளனர்.

சமச்சீர் கல்வி வழக்கில் வழங்கப்பட்டதுபோல் புதிய தலைமைச் செயலக வழக்கிலும் எதிரான தீர்ப்பு வந்திடுமோ என்ற அச்சம் காரணமாகவே அதில் புதிய மருத்துவமனை செயல்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். சமச்சீர் கல்வி திட்டத்தில் ஜெயலலிதா செய்தது தவறு என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்களோ, ஏன் தலைமைச் செயலகமாக பயன்படுத்தவில்லை என்று சொன்னாலும் கூட வேறு ஏதாவது அரசு பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்று கேட்டுவிடுவார்களோ என்ற அச்சம், பயம் இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அவசர அவசரமாக புதிய மருத்துவமனை செயல்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வருவதிலே நாங்கள் எதிர்க்கிறோம் என்று யாரும் கருத வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதற்கு ஏற்ற இடமா அது. மருத்துவ கல்லூரி, மருத்துவமனை என்றால் வெறும் நாடகமா. நீதிமன்றத்தை ஏமாற்றுகிற திட்டமா. இவர் அகங்காரத்தை ஒதிக்கி தள்ளவேண்டும்., இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!