Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, August 1, 2011

தமிழகத்தில் மாற்றம் விரும்பியவர்களுக்கு சரியான பாடம்! குஷ்பூ

தமிழக அரசை எதிர்த்து திமுக சார்பில் 01.08.2011 அன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன் திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பூவும் கலந்து கொண்டார். இதனால் ஸ்டாலினுடன் சேர்த்து குஷ்பூவும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, இந்த ஆர்ப்பாட்டம் எதற்காக என்றால் திமுகவினர் மீது தேவையில்லாமல் பொய் வழக்கு போட்டு கைது செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு என்ன மாற்றம் வருகிறது என்று பார்ப்போம் என்றார்.

மேலும் தமிழகத்தில் மாற்றம் விரும்பியவர்களுக்கு சரியான பாடம் கொடுத்திருக்கிறார் ஜெயா, அடுத்த தேர்தலில் யாரும் தோற்கடிக்க வேண்டாம் தானே தலையில் அள்ளி போட்டுகொள்ளப்போகிறார் என்று குஷ்பூ பேசினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!