Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, August 18, 2011

வைரஸ் கிருமிகள் ஏற்படுத்தும் ரத்த மன அழுத்தம்

பெய்ஜிங்: மன அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றால் ரத்த அழுத்தம் நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தற்போது அந்த நோய்க்கு பொதுவான வைரஸ் கிருமிகளே காரணம் என தெரிய வந்துள்ளது.

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சாயோயங் இருதய நோய் ஆஸ்பத்திரியின் டாக்டர் யங் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மனித உடலில் உள்ள சைடோமெகலோ என்ற வகை வைரஸ் கிருமிகளுக்கும், உயர் ரத்த அழுத்த நோய்க்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைரஸ் கிருமிகள் தாக்குதலினால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை கண்டுபிடிப்பது சிரமம். ஏனெனில் அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாது. இந்த வைரஸ் கிருமிகளை தெளிவாக கண்டுபிடிப்பதன் மூலம் அதற்கான மருந்து மாத்திரைகளை கண்டுபிடிக்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ரத்த அழுத்த நோயை மிக எளிதாக குணப்படுத்த முடியும் என்றும் கூறி உள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!