Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, August 23, 2011

அறப்போராட்டம் என்ற பெயரில் சாராய பார்ட்டி?

புதுடெல்லி:வலுவான லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி அறப்போராட்டம் நடந்து வரும் ராம்லீலா மைதானத்தில் நேற்றிரவு சுமார் 30 பேர் அநாகரீகமாக நடந்து கொண்டனர். ராம்லீலா மைதானத்தில் தாராளமாக சாப்பாடும் சாராயமும் விநியோகித்தனர்., இதில் மப்பு ஏறிய சிலர் ரகளையில் ஈடுபட்டனர்.

நிருபர்கள் தங்கி இருந்த கூடாரத்துக்குள் நுழைந்த அவர் மோதலில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை வெளியேற்றினார்கள். சுமார் 1 1/2 மணி நேரம் கழித்து அந்த வாலிபருடன் சுமார் 30 பேர் வந்தனர். அவர்கள் அனைவரும் நிற்க முடியாத அளவுக்கு மது போதை மயக்கத்தில் இருந்தனர். எங்களை பேட்டி காணுங்கள் என்று கூறி பிடிவாதம் பிடித்தனர்.மீண்டும் போலீசார் வரவழைக்கப்பட்டு 30 பேரும் அகற்றப்பட்டனர்.

இதையடுத்து 30 பேரும் ராம்லீலா மைதானத்துக்குள் பயங்கர ரகளையில் ஈடுபட்டனர். தடுப்புக் கட்டைகளை உடைத்தனர். இதனால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக மைதானத்தில் இருந்து வெளியேற்றினார்கள்., சாப்பாட்டுக்கும் சாராயத்துக்கும் கூடி கூத்தடிக்கும் ராம்லீலா மைதானம்.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!