Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, August 7, 2011

கண்ணின் ஒளியை முற்றிலும் பறிக்கும் காரணிகள் !?

உலகில் பல மக்கள் கண் பார்வையை இழக்க காரணம், ‘க்ளோகோமா". இது கண்ணின் ஒளியை முற்றிலும் பறிக்கக் கூடியது.

கண்களின் அழுத்தத்தை தக்க வைக்கும் அளவுக்கு வேண்டிய கண்ணீர், வெளியேறி விட,கண்களில் மெல்ல அழுத்தம் அதிகமாகும்.இந்த அதிகரித்த அழுத்தத்தை ‘க்ளோகோமா’ என்பர். இதனால் கண் நரம்பு பாதிகக்கப்பட, பார்வை மெதுவாகக் குறையும்.

க்ளோகோமாவின் அறிகுறிகள் : கண்களின் அழுத்தம் அதிகமாகும். ஆனால் 30% நோயாளிகளுக்கு இந்நோய்க்கான அறிகுறி தெரிவதில்லை.நோயின் தன்மை அதிகமாக, ஒரு சிலருக்கு கண்களில் கண்ணீர் வெளிவராது அல்லது எரிச்சல் அல்லது அரிப்பு என்று கண்கள் பாதிக்கப்படும்.ஒரு சிலருக்கு கண்களில் வலி அல்லது தலைவலி ஏற்படும். 40 வயதுக்கு முன்பே, ஒரு சிலருக்கு கண்ணாடி அணியும் சூழ்நிலை உருவாகும். எதிரே உள்ள எண் வேகமாக பெரிதாகும். வெயிலில் செல்லும்போது சிக்கலும், இரவில் வெளிச்சத்தில் வானவில் போன்ற வண்ணங்களும் ஏற்படும்.

யார் யாருக்கு ஏற்படும் : 35 வயதான பிறகு இந்நோய் சுமார் 4% பேருக்கு ஏற்படும். வயது ஆக ஆக இதன் சதவிகிதமும் அதிகமாகும்.பரம்பரையாக இந்தக் குறைபாடு உள்ள குடும்பத்தின் உறுப்பினர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் அல்லது ‘மயோபியா’(மைனஸ் கண்ணாடி அணிந்தவர்கள்) உள்ளவர்கள் அவ்வப்போது கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்., குழந்தைகள் பிறக்கும்போதே க்ளோகோமா ஏற்படும் வாய்ப்பு உண்டு. க்ளோகாமாவுக்கான சிகிச்சை முறைகளும் உண்டு.

அக்யூட் க்ளோகோமா : ஒரு சில நோயாளிகளுக்கு கண்களில் அதிக வலி இருக்கும்.இது ஹைப்பர் மெட்ரோபிக் பார்வைக் கோளாறு உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படும்.

35 வயதுக்கு மேல் அனைவரும் கண் பரிசோதனை செய்து சொள்வது நல்லது. அவசியம் ஏற்பட்டால் ‘கம்ப்யூட்டரைஸ்டு ஆட்டோ மெடட் பேரா மீட்டரிÕ மூலம் கண் பரிசோதிக்கப்படும்.

சிகிச்சை முறை : மருந்து மாத்திரைகளாலும் கண்களின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சையும் செய்யப்படும்.

‘ட்ரேபேக்யூலெக்டாமி’ என்ற மைக்ரோ சர்ஜரியுடன் வேறு சில மருந்துகளும் அளிக்கப்பட, 90% பேருக்கு க்ளோகோமா பூரணமாக குணமாகி, உள்ளது., லேசர் அறுவை சிகிச்சை மூலம் ஆரம்பக்கட்ட க்ளோகோமாவை குணப்படுத்த முடியும்.

இவ்வாறு ட்ரே பேக்யூ லெக்டாமி செய்த பிறகு நோய் கட்டுப்படவில்லை எனில் சிறப்பு வகை வால்வ் பயன்படுத்தி கண்களின் அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!