Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, October 22, 2011

நல்ல முடிவு எடுத்த நடிகர்கள் சங்கம் ?

சென்னை, அக் 22 : ஆதரவின்றி தவிக்கும் வயதான நடிகர், நடிகைகளுக்கு முதியோர் இல்லம் கட்ட நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

நடிகர் லூஸ் மோகன் வயதான காலத்தில் மகன் தன்னை கவனிக்கவில்லை என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளித்தார். பராமரிக்க யாரும் இன்றி தவிப்பதாக அப்போது கண்ணீர் வடித்தார். இது போல் வயதான நடிகர், நடிகைகள் பலர் ஆதரவின்றி கஷ்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாஞ்சில் நளினி, எம்.ஆர்.பி. சந்தானம், எஸ்.சுப்பு லட்சுமி, மதுரை ஜெயந்தி, வி.ஆர். நாதன்,நெல்லை சாரதி, எம்.கே. குள்ளமணி, பி.நீலா, என அவர்கள் பட்டியல் நீள்கிறது. மொத்தம் 131 வயதான நடிகர், நடிகைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு மாதம் தோறும் நடிகர் சங்கம் ரூ.500 ஓய்வூதியம் வழங்கி வருகிறது. 2010-ம் ஆண்டு இவர்களுக்கு ரூ.7.86 லட்சம் பென்சன் ஆக வழங்கப்பட்டு உள்ளது.

இவர்களுக்கு முதியோர் இல்லம் கட்டப்பட்டால் கடைசி காலத்தை சந்தோஷமாக கழிப்பார்கள் என்று நடிகர் சங்கம் கருதுகிறது. ஒரு ஏக்கர் நிலபரப்பில் இந்த இல்லத்தை கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்து தரும்படி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!