Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, October 9, 2011

போலீசா அல்லது பெண்கள் புரோக்கரா ??

காவல்துறை பற்றி சிறு முன்னோட்டம், காவல்துறை என்பது வெறும் சம்பளத்துக்கு மட்டும் வேலை செய்பவர்கள் அல்ல, அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு அதாவது சமுதாய நலன் பேனி காக்க முழு ஒத்துளைப்புடன் உறுதுணையாக இருக்கவேண்டியவர்கள் அதற்கு மாறாக காசுக்காக, சில சமூக விரோதிகள் (பெண் புரோக்கர்கள்) பின்னால் தன் கடமை மறந்து ஈன செய்கையில் ஈடுபடுகிறார்கள் அவற்றில் சில இங்கு காண்போம்.

கடந்த 2010ம் ஆண்டு அதிகளவாக 3,022 கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், கடந்தாண்டு 580 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி.,யின் கடத்தல் தடுப்பு பிரிவின் தகவல் கூறுகிறது.

1. விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள், புரோக்கர்கள் கைது செய்யப்படும் போது, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு வந்தனர். ஆனால், கடந்த 2012ம் ஆண்டு, சுப்ரீம் கோர்ட், "மீட்கப்படும் பெண்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதி, அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு பின், பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று கூறியது. உண்மையில் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் பெண்கள், அடுத்தகட்டமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப் படுவதில்லை. காவல்துறை உதவியுடன் புரோக்கர்கள் உள்ளே நுழைந்து, பெற்றோர், வழக்கறிஞர்கள் உதவியுடன் அந்தப் பெண்களை மீண்டும் வெளியில் எடுத்து, தொழிலில் மீண்டும் ஈடுபடுத்துகின்றனர்.

2. விபசாரத்தில் இருந்து மீட்கப்படும் பெண்களுக்கான," ஜஸ்ட் டிரஸ்ட்' தன்னார்வ தொண்டு அமைப்பு நடத்தி வரும், ஜெபராஜ் கூறியதாவது : பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான வழக்கு விவரங்களை சிறைத்துறை நன்னடத்தை அலுவலரிடம் ஒப்படைக்க கூடாது. சமூக நலத்துறை நன்னடத்தை அலுவலரிடம் தர வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்ட பெண்களை சீர்திருத்த முடியும். ஐகோர்ட் ஏற்கனவே பிறப்பித்துள்ள வழிகாட்டுதலின்படி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தர வேண்டும். ஆனால், அப்படி எதுவும் செய்வதில்லை. அதைச் செய்தால், அவர்கள் மீண்டும் விபசார தொழிலுக்கு வருவதை தடுக்கலாம்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!