Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, October 12, 2011

மாணவர்கள் முதல் மனித உரிமை ஆர்வலர்கள் வரை!?

அஹ்மதாபாத் : கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை குஜாராத் காவல்துறை கைது செய்ததை பல சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பை தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளதை தொடர்ந்து அவரது மனைவி ஸ்வேதாவும், தனது கணவரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர்.

இப்பேரணியில் பல கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்துக் கொண்டு சஞ்சீவ் பட் கைதுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த பேரணி மனித உரிமை ஆர்வலர்கள் மூலமாக நடத்தப்பட்டது.

இந்த பேரணியில் குஜராத் அரசிற்கு (நரேந்திர கேடி) எதிராக ‘ஹம் ஹோங்கே கம்யாப்’ என்று உச்ச்சரித்தப்படி சஞ்சீவ் பட்டின் வீட்டில் ஆரம்பித்து ‘ஹெல்மெட் சர்கிள்’ வரை இந்த பேரணி நடைபெற்றது.

சஞ்சீவ் பட் கைது செய்த நாள் முதல் குஜராத்தின் இளைஞர்கள் பலர் சமூக கூட்டங்களை ஏற்படுத்தியும் “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் ஸ்வேதா” என்றும் அவரது மனைவிக்கு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

2 comments :

சஞ்சீவ் பட்டை குஜாராத் காவல்துறை கைது செய்ததற்கும் மோடிக்கும் ஒரு தொடர்பும் கிடையாதா?

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!