Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, October 9, 2011

அதிகம் தூங்கினால் தூங்குமூஞ்சி ? தூங்காவிடில் ??

மனுசனோட தினசரிச் செயல்கள்ல குறிப்பிடத்தக்கது, தூக்கம். தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வெடுக்கலைன்னா, மறுநாள் அவனால ஒழுங்கா வேலை பார்க்க முடியாது.

நாள் முழுவதும் உழைக்கிற நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கத்தான் இந்தத் தூக்கம் அவசியமாகுது (சில உறுப்புகள் 24 மணி நேரமும் இயங்குவது தனிக்கதை.).

எனவே, ஒவ்வொருவருக்கும் தூக்கம்கிறது ரொம்ப அவசியம். சாப்பிடாம கூட சில நாட்களுக்கு உயிரோட இருந்துடலாம். ஆனா, தூங்காம இருக்க முடியாது. ஒருவேளை நம்மால தூங்க முடியலைன்னா என்ன நடக்கும்? சில நாட்களுக்கு மனுசன் தூங்காம இருந்தால், அவன் ரத்தத்துல இருக்குற வெள்ளை அணுக்களோட எண்ணிக்கை குறைஞ்சி, நோய் எதிர்ப்புத் தன்மையும் குறையுது. தசை களோட வலிமை குறையும்.

ரத்தத்துல சர்க்கரையோட அளவு கட்டுப்பாட்டுல இருக்காது. உடல் வெப்பநிலை மாறுபடும். இதுமாதிரி உடலுக்குச் சிக்கலை உண்டாக்குகிற தூக்கப் பிரச்சினை, உள்ளத்துக்கும் சிக்கலை உண்டாக்குது. தூங்காம இருக்குறதால ரத்தத்துல இருக்குற மனஅழுத்தத்துக்கு காரணமான `கார்ட்டிசோல்' என்கிற ரசாயனத்தோட அளவு கூடுது.

ஞாபகசக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். உடலையும், மனசையும் ஒருசேர பாதிக்கிற ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு. எனவே, தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுத்துக்குங்க., ஓ நேரமாச்சு குட் நயிட்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!