Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, October 5, 2011

குஜராத் கேடிகளால் தனது கணவருக்கு ஆபத்து? சஞ்சீவ் பட் மனைவி !?

புது தில்லி:  சிறையில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது.

சஞ்சீவ் பட்டின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது மனைவி ஸ்வேதா மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இது தொடர்பாக மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே. சிங் தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை உயர் நிலைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர், "சஞ்சீவ் பட், அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்' என்று குஜராத் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.சஞ்சீவ் பட்டின் உயிருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக தனியாக ஆய்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

போலீஸ்காரர் கே.சி. பந்த் என்பவரை மிரட்டி வாக்குமூலம் பெற்று சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாக சஞ்சீவ் பட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சில நாள்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவரது மனைவி ஸ்வேதா, மத்திய உள்துறை அமைச்சகர் ப. சிதம்பரத்துக்கு கடிதம் அனுப்பினார். அதில், தனது கணவர், குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, ஜாமீன் கோரி சஞ்சீவ் பட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சில அரசியல்வாதிகளின் தூண்டுதளால் போலீஸ்காரர் கே.சி. பந்த் செயல்படுகிறார் என்றும் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது., மோடியும் அவரை சார்ந்த ஹிந்துத்துவவாதிகளால் கணவருக்கு ஆபத்து என்றும் கூறியுள்ளார்.

2002-ல் குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக முதல்வர் மோடிக்கு எதிராக சஞ்சீவ் பட், உண்மையை கூறி வருவது நினைவுகூரத்தக்கது.

2 comments :

இந்த நர மாமிச கேடிகளை உயிருடன் கொளுத்தணும் இந்த வந்தேறிகளை

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!