Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, October 26, 2011

இந்தியா ஒரு பாசிச நாடா? அல்லது பயங்கரவாத காடா??

புதுடெல்லி : கஷ்மீர் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகளை குறித்தும், மாநிலத்திலிருந்து காணாமல் போன் ஆயிரக்கணக்கான நபர்களைக்குறித்தும் முழுமையான விசாரணையை நடத்த மத்திய அரசு தயாராகவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பீப்பிள்ஸ் யூனியன் ஃபார் சிவில் லிபர்டீஸ்(பி.யு.சி.எல்), பீப்பிள்ஸ் யூனியன் ஃபார் டெமோக்ரேடிக் ரைட்ஸ்(பி.யு.டி.ஆர்) ஆகிய அமைப்புகள் இணைந்து டெல்லியில் நடத்திய கருத்தரங்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. குற்றவாளிகள் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவர அரசு தயங்கக்கூடாது என கருத்தரங்கம் கோரிக்கை விடுத்தது.

காணாமல் போனவர்கள் தொடர்பான ஐ.நாவின் சட்டத்தை அங்கீகரிக்க இந்தியா இனிமேலாவது தயாராகவேண்டும். சித்திரவதை தடுப்பு ஒப்பந்தம் மசோதா-2010இல் திருத்தங்களை அரசு மேற்கொள்ளவேண்டும். அடக்கம் செய்யப்பட்ட அடையாளம் தெரியாத உடல்கள் தீவிரவாதிகளுடையது என அரசு கூறுவதை அங்கீகரிக்க இயலாது.

பத்தாயிரம் பேர் கஷ்மீரில் காணாமல் போன சூழலில் அவர்களை குறித்த தெளிவான விபரங்களை வெளியிடவேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. கஷ்மீரின் வேறு சில பகுதிகளிலும் அடையாளம் தெரியாத கல்லறைகள் இருப்பதாக அறிக்கைகள் வெளியான சூழலில் இவ்விவகாரத்தில் வெளிப்படையான விசாரணைக்கு அரசு ஏன் தயாராகவில்லை? என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

இக்கருத்தரங்கில் குர்ரம் பர்வேஷ், பரம்ஜித் கவுர் கத்ரா, நித்யா ராமகிருஷ்ணன், உஷா ராமநாதன், நீதிபதி ராஜேந்திர சச்சார், ப்ருந்தா க்ரோவர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

@இங்கு சில தகவல்களை பார்க்கலாம் : சிங்கள இன வெறியர்களுக்கு இந்தியாவிலிருந்து இந்திய இராணுவத்தையும் ராணுவ தளவாடங்களையும் அனுப்பி சொந்த ( ஈழ ) மக்களை கொன்று குவிக்க பெரும் உதவி செய்தது, (இன்று வரை பாதிக்கப்பட்ட ஈழ மக்களளுக்கு மீள் குடி ஏற்றம் ஏதும் செய்து தரவில்லை என்பது குறுப்பிட தக்கது), 

அதேபோல் குஜராத்தில் சிறுபான்மையரை கொன்று அவர்களின் சொத்துக்களை சூறையாடிய குஜராத் முதல்வன் நரேந்திர கேடியும், இவனுடைய அரசும், அரசு அதிகாரிகளும் துணை போனது ஒவ்வொரு நாளும் தினசரிகளில் வந்த வண்ணம் இருக்கிறது, இந்த உலக கேடியை இந்திய சட்டமோ சட்டத்தை சார்ந்தவர்களோ இதுவரை இவனுக்கு தண்டனை வாங்கித்தரவில்லை வாங்கித்தரவும் மாட்டார்கள் ஏன் என்றால் இந்தியா ஒரு பயங்கரவாத நாடு என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்., சிந்திக்கட்டும் நடுநிலையாளர்கள் !?.

1 comments :

இனப்படுகொளையாளன் இருவரையும் ஒரோ இடத்தில் தூக்கிலிட வேண்டும். thanx for sharing by.yarl guna

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!