Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, October 13, 2011

தீவிரவாதத்தை காட்டும் தீவிரவாதிகள் ??

ஊழல் ஒழிப்பு மற்றும் பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரேயின் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் முக்கியமானவர் பிரசாந்த் பூஷன். பிரபலமான சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர். இவர் நேற்று மாலை சுப்ரீம் கோர்ட்டிற்கு எதிரேயுள்ள, புதிதாக கட்டப்பட்ட வழக்கறிஞர்கள் சேம்பரில் உள்ள தன் அறையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, பிரசாந்த் பூஷனை சந்திக்க தாங்கள் அனுமதி வாங்கியிருப்பதாகக் கூறிக் கொண்டு, இரண்டு வாலிபர்கள் (ஸ்ரீராம்சேனா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்) அவரது அலுவலகத்திற்குள் வேகமாக நுழைந்தனர். உள்ளே நுழைந்த இரண்டு பேரும் பிரசாந்த் பூஷனை சரமாரியாக தாக்கினர்; அடித்து, உதைத்தனர். அவரை நாற்காலியில் இருந்து கீழே இழுத்துப் போட்டு தாக்கியதோடு, நெஞ்சிலும் மிதித்தனர். இந்தத் தாக்குதலில், பூஷனின் சட்டை கிழிந்ததோடு, அவரின் மூக்குக் கண்ணாடியும் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்தத் திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத, பூஷன் அலுவலக ஊழியர்களும், மற்றவர்களும் அங்கு கூடி, தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க முற்பட்டனர். அதில், ஒரு வாலிபர் சிக்கினார்; மற்றொரு வாலிபர் தப்பி ஓடி விட்டார். பின்னர் பிடிபட்ட நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாக்குதலுக்கு ஆளான பிரசாந்த் பூஷனை, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தியாவை பல மாநிலமாக உடைக்க போவது இந்துத்துவ தீவிரவாதிகள்தான் வேறு யாருமல்ல.

1 comments :

ஓஹோ..!!!அப்ப ஒங்க பாஷையில பிஷாந் பூஷன் தியாஹி...ரொம்ப சந்தோஷம்..ஆனா...பயங்கரவாதிகளைவிட இந்த படித்த முட்டாள் பிரஷாந் மாதிரி ஆளுங்கள ஒதச்சாலே நாட்டுல உள்ள பயங்கரவாத,தீவிரவாத பயளுங்களுங்கெல்லாம் ஓடிடுவானுங்க...

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!