Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, October 31, 2011

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட குழந்தை பிறப்பு !!

உலக மக்கள் தொகை 700 கோடியை தொட்டது. 700 கோடியாவது குழந்தை இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலம் பாக்பட் மாவட்டம் சன்ஹோபி கிராமத்தில் இன்று பிறக்கும் எனது ஐக்கிய நாடுகள் அமைப்பான பாப்புலேசன் பண்ட் பிரிவு தெரிவித்து இருந்தது.

ஆனால் 700-வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்தது. உலகமே ஆவலடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த 700-வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்தது.

கேமிலி தலுரா என்ற பெண் இந்த குழந்தையை பெற்றெடுத்து பெருமையை பெற்றார். அந்த பெண் குழந்தையின் பெயர் டேனிசாமே. நேற்று நள்ளிரவுக்கு சற்று முன்பு இந்த குழந்தை பிறந்தது. இந்த குழந்தைதான் 700-வது கோடி குழந்தை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த குழந்தை 2.5 கிலோ எடையுடன் பிறந்தது. குழந்தையை பெற்றெடுத்த கேமிலி, இது தொடர்பாக கூறும்போது உலகின் 700-வது கோடியாவது குழந்தை என்பதை என்னால் நம்ப இயலவில்லை எனது குழந்தை மிகவும் அழகாக உள்ளது என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!