Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, October 24, 2011

S P சரணுடன் கிசு கிசுக்கப்பட்ட சோனா மீண்டும்

நடிகை சோனாவுக்கும், பின்னணிப் பாடகர் எஸ்.பி.சரணுக்கும் இடையே மங்காத்தா மது விருந்தின்போது மோதல் ஏற்பட்டது.

சரண் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார்; அவரை கைது செய்யும் வரை நான் ஓய மாட்டேன் என்றெல்லாம் வீராவேசமாக வசனம் பேசிய சோனா, சரணிடம் நான் எதிர்பார்த்தது கிடைத்து விட்டது; அவர் கடிதம் மூலம் வருத்தம் தெரிவித்து விட்டார், என்று கூறிய கையோடு புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு வெளிநாட்டுக்கு போய் விட்டார்.

இதையடுத்து சோனா தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்திருப்பதாக அவரது வட்டார தகவல்கள் தெரிவித்தன. கடைசி வரை சோனா - சரண் விஷயத்தில் நடந்த உண்மை என்ன என்பது தெரியாத நிலையில் மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார் சோனா. சோக்காலி என்ற படத்தில் நடிக்கிறாராம். இதில் அவருக்கு முக்கிய வேடமாம்.

இதுகுறித்து சோனா அளித்துள்ள பேட்டியில், இந்த மாதம் ஷூட்டிங்கைத் தொடங்குகிறார்கள். முக்கிய வேடத்தில் நான் நடிக்கிறேன். வில்லத்தனமாகவும், நல்லதனமாகவும் இதில் நான் வித்தியாசமாக நடிக்கிறேன். இது கிட்டத்தட்ட எனது நிஜ கேரக்டர் மாதிரியே இருப்பதால் ஈடுபாட்டுடன் நடிக்கிறேன், என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!