Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, October 2, 2011

போராட்டத்தால் இருட்டில் மூழ்கப்போகும் தென் இந்தியா !!

ஹைதராபாத் : தனி மாநிலம் கோரி தெலுங்கானாவில் நடக்கும் போராட்டத்தால் தென் இந்தியா முழுவதும் இருட்டில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிங்கரேணி நிலக்கரி சுரங்கம் போராட்டத்தால் மூடப்பட்டுள்ளதால் மின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மின் உற்பத்தி பாதிப்பினால் தமிழ் நாடு மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தின் பணியாளர்கள் தெலுங்கானா கோரிக்கைக்கு அதரவு தெரிவிக்கும் விதமாக பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 2600 மெகாவாட் திறன் கொண்ட ராமகுண்டம் தேசிய அனல் மின் நிலையம் நிலக்கரி பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் ராமகுண்டம் தேசிய அனல் மின் நிலையத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு 780 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு மின்சார துறை பெறுகிறது. எனவே இவ்வனல் நிலையம் மூடப்பட்டுள்ளதால் தமிழ் நாட்டிற்கு 780 மெகாவாட் மின்சாரம் கிடைக்காமல் தடைபடும்.

இதிலிருந்து தமிழ் நாடு மற்றும் கர்நாடகாவில் வசிக்கும் மக்கள் தெலுங்கானா போராட்டத்தால் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பது உறுதியாகிறது. மேலும் இந்த பாதிப்பினால் ஏற்கனவே இருக்கும் இரண்டு மணி நேரம் மின்வெட்டுடன் சேர்த்து மேலும் அரை மணி நேரம் மின்வெட்டு செய்ய தமிநாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கர்நாடகாவில் ஏற்கனவே மின் தட்டுப்பாடு காரணமாக போராட்டங்கள் வெடித்துள்ளதால் கர்நாடக அரசு கடந்த சனிக்கிழமை முதல் பஞ்சாபிலிருந்து மின்சாரம் வாங்குவதாக மின்சார துறை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவத்துள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!