நெல்லூர் மாவட்டம், காவலி அடுத்த முசுனூரு என்ற இடத்தில், நிருபர்களிடம் பேசிய கவர்னர் ரோசய்யா : இலங்கையில், தமிழர்கள் தாக்குதலுக்குள்ளாவது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தங்களுக்கு அநியாயம் நடந்ததாக எவரேனும் எனது கவனத்திறகு கொண்டு வந்தால், அதற்கு தீர்வு காண, மாநில அரசுக்கு ஆலோசனை தெரிவிக்க தயாராக உள்ளேன்.
தமிழகத்தில் வாழும் தமிழர்களுடன், தெலுங்கு தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கவர்னராக பொறுப்பு வகித்து வரும் எனக்கு, அனைவரும் சமமானவர்கள் தான்.சில விஷயங்களில், மாநிலங்களிடையே சரியான புரிந்துணர்வு இருப்பது மிகவும் முக்கியம். இரு மாநிலத்தவர்களும் பக்கத்து மாநிலங்களின் தேவையை அறிந்து கொள்ள வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு ஈழத்திற்கு எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று மார் (ராப்பு ) தட்டியவர் ஜெயா., பதவியில் அமர்ந்ததும் ஒரு வார்த்தை கூட ஈழத்தை பற்றி பேசாதது ஏன். பதவிக்காக காளை பிடிப்பதும் பதவியில் அமர்ந்ததும் எட்டி உதைப்பதுதான் அரசியல் சூட்சுமமோ.
தமிழர்களே ஒன்று திரளுங்கள் அரசியலும், அரசியல் வாதிகளும் செய்யாததை நாம் செய்வோம் நம் ஈழ உறவுக்காக., தமிழன் என்கிற உணர்வு நம்மிடம் மீதம் இருந்தால்.





1 comments:
Nicely told... All Politicians are Dirty as Used Diapers....if you don't change ...it will smell shit
Post a Comment