Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, October 31, 2011

ஈழ போர் குற்ற அறிக்கை தயார் ! சமரச குழு !!

கொழும்பு, அக்.31: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்து முடிந்த போர் குறித்த அறிக்கை தயாராகிவிட்டது.

அந்நாட்டின் சமரச குழு தயாரித்த அறிக்கை அடுத்த 15 நாள்களுக்குள் அதிபர் மகிந்தா ராஜபட்சவிடம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

2010-ம் ஆண்டு எல்எல்ஆர்சி-யை அதிபர் ராஜபட்ச அமைத்தார். 2002-ம் ஆண்டு நார்வே அமைதிக் குழு ஏற்படுத்திய சமாதான திட்டம் முறிந்துபோனது முதல் 2010-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வரையான நிகழ்வுகளை ஆராயுமாறு இக்குழுவை அவர் கேட்டுக் கொண்டார்.

அறிக்கையில் 1,000 வாய்மொழி தகவல்களும், 5,000 எழுத்துபூர்வ தகவல்களும் இடம்பெற்றுள்ளன. பல தரப்பட்ட மக்களும் தங்களது கருத்துகளை அளித்துள்ளதாக விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இலங்கையில் நிகழ்ந்த போர் குறித்து சர்வதேச அளவில் கடுமையான விமர்சனம் எழுந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எல்எல்ஆர்சி-ஐ இலங்கை அரசு அமைத்தது. இருப்பினும் சுயேச்சையான விசாரணை தேவை என்று பல்வேறு குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை போர் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

போர் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்நிலையில் அரசு அமைத்த சமரச தீர்வு குழுவின் போர் அறிக்கை வெளியாக உள்ளது.

இனப்படுகொளையாளக்கு எதிராக அறிக்கை எந்த அளவுக்கு இருக்கும் என்பது வந்ததும்தான் தெரியும்., இதுபோல் மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இக்கொடியவனுக்கு நெருக்கடிகள் கொடுத்துக்கொண்டு இருக்கவேண்டும் நம் தாயகத்தின் துயர் துடைக்க.,செய்வோமா.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!