Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, October 21, 2011

தனிமை சிறைக்கு தடை விதிக்கச்சொல்லும் ஐ ந !?

ஐ.நா:நீண்டகாலமாக தனிமைச் சிறையில் அடைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என சித்திரவதைகளைக் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா குழு தெரிவித்துள்ளது.

தனிமைச்சிறை மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் சிறைக் கைதிகளுக்கு பிரச்சனைகளை உருவாக்கும் என விசாரணைக் குழுவிற்கு தலைமை வகித்துள்ள ஜுவான் மென்ட்ஸ் ஐ.நா சபையின் மனித உரிமை கவுன்சிலில் தெரிவித்துள்ளார்.

சிறைக் கைதிகளுக்கு மனோரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் சித்திரவதை முறைகளை பயன்படுத்தக்கூடாது. சிறைக் கைதியின் பாதுகாப்பிற்கு தனிமைச்சிறை தேவை என்றாலும் 15 தினங்களுக்கு மேலான தனிமைச் சிறைக்கு தடை விதிக்க வேண்டும்.

பல நாடுகளும் சிறைக் கைதிகளை தனிமைச் சிறையில் அடைத்துள்ளனர். குறைந்த நாட்கள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களிடம் நடத்திய ஆய்வில் மனோரீதியாக-உடல்ரீதியாக பிரச்சனைகளை கண்டறிந்ததாக வாஷிங்டனில் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியரான மென்ட்ஸ் கூறுகிறார்.

அமெரிக்காவில் 25 ஆயிரம் பேர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சீன அரசு அரசு ரகசியங்களை வெளிநாட்டினருக்கு கசியச்செய்த அளித்த வழக்கில் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பெண்ணை இரண்டு ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைத்துள்ளது என மென்ட்ஸ் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!