Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, October 13, 2011

தேர்தலில் ஜெயிக்க குடி மகனுக்கு டோர் டெலிவரி !!

செஞ்சி : உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவியை விட, ஊராட்சி தலைவர் பதவிக்கே, போட்டி அதிகமாகி உள்ளது.

இவர்கள் பதவியை பிடிக்க, ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருள் கொடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும், குடிமகன்களை திருப்திபடுத்த தவறுவதில்லை. இதுவரை வேட்பாளர்களை தேடிச் சென்ற குடிமகன்களுக்கு மட்டுமே, "குவார்ட்டர்' பாட்டில் கிடைத்து வந்தது. இந்த முறை, செஞ்சி ஒன்றியம் சிங்கவரம் கிராமத்தில், தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் சிலர், மாலை நேரமானதும், குடிமகன்களின் வீடுகளுக்கே, "குவார்ட்டர்' பாட்டில்களை, "டோர் டெலிவரி' செய்துள்ளனர்.

இத்தகவல் மற்ற கிராமங்களுக்கும் பரவி, "திட்டத்தை நம்ம ஊரிலும் அமல்படுத்தினால் நல்லா இருக்குமே...' என, மற்ற ஊரில் உள்ள குடிமகன்கள் பலரும் ஆதங்கப்படுகின்றனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!