Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, January 4, 2012

சென்னையை கலக்க இருக்கும் A R R ன் எண்ணற்ற வாய்ப்புகள் !!

சென்னை, ஜன.5: இந்தியா-ஜெர்மனி இடையே கடந்த 60 ஆண்டுகளாக உள்ள தூதரக உறவைக் கொண்டாடும் வகையில் "எண்ணற்ற வாய்ப்புகள்' என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, லாப் இந்தியா என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஜெர்மனியில் உள்ள பேபல்ஸ்பெர்கை சேர்ந்த தி ஜெர்மன் ஃபிலிம் இசைக் குழு சார்பில் புது தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் கிளாசிக் இன்கான்டேஷன்ஸ் என்ற தலைப்பில் இசை நகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பிரபல பாடல்கள், பின்னணி இசை ஆகியவை இசைக்கப்பபடும்.

இது குறித்து சென்னையில் புதன்கிழமை ஏ.ஆர்.ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறியது: எனது இசை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பாடல் வரிகள், நடனங்கள் இல்லாமல் நடைபெற்றது கிடையாது. இவை இல்லாமல் இசை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று நீண்ட நாள்களாக எண்ணியிருந்தேன்.

இப்போது பேபல்ஸ்பெர்கை சேர்ந்த புகழ்பெற்ற இசைக் குழு சார்பில் பாடல் வரிகள், நடனம் இல்லாமல் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்தக் குழுவி 100 கலைஞர்களுக்கும் மேல் பங்கு பெறுகின்றனர். இதில் நான் இசையமைத்த ரோஜா, பம்பாய், எந்திரன் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்கள் மற்றும் பிற மொழிகளில் வெளியான ஸ்வதேஷ், தி ரைசிங், எலிசபத்: தி கோல்டன் ஏஜ் ஆகிய திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை மற்றும் திரைப்படங்களின் தீம் இசை ஆகியவை இசைக்கப்படவுள்ளன.

இதன் மூலம் திரைப்படங்களில் வரும் இசை மற்றும் பின்னணி இசை குறித்து இசை ஆர்வலர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்., சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். மேலும், என்னுடைய கே.எம். இசைப் பள்ளியைச் சேர்ந்த பாடகர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு தமிழில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் உள்பட 4 படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!